6
யார் அழைக்கிறார்கள் என்று அலைபேசியை எடுத்துப் பார்த்த மனோ சங்கரி என்று தெரிந்ததும் கட் செய்தான்.
ராஜேஸ்வரியைப் பார்த்து புன்னகைத்தான். அவன் புன்னகை முகத்தை ஏறிட்டவள் அவன் விழிகளைப் பார்த்துக் கேட்டாள்.
"கொஞ்சம் தனியா பேசலாமா?"
"யெஸ்" எழுந்தான்.
வீட்டிற்கு பின்னால் இருந்த சிறிய தோட்டத்திற்கு இருவரும் வந்தனர்.
செடியில் பூத்திருந்த ரோஜாவை ரசித்துப் பார்த்தான்.
"பூ ரொம்பப் பிடிக்குமா?" கேட்ட ராஜேஸ்வரியைப் பார்த்து புன்னகைத்தான்.
"ரொம்ப. "
அவன் ரோஜாவை பார்த்து மகிழ்ந்ததும் ரொம்ப என்று குழந்தைத்தனமாக சொன்னதும் அவளை அவன் பால் ஈர்த்தது.
"உங்களை நான் எப்படி கூப்பிடலாம்?"
"ஜஸ்ட் கால் மி மனோ"
"நைஸ்"
"ம்"
"மனோ"
"யெஸ் ராஜ்" சொன்னவன் "உங்களை ராஜ்னு கூப்பிடவா?" கேட்டான்.
அவளை ராஜி என்று அழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ராஜ் என்று அழைக்கப்படுவது இதுதான் முதல் முறை. அவன் குரலில் ராஜ் என்று அழைக்கப்பட்டது அவளுக்கு ஒரு மெலிதான மயக்கத்தைத் தந்தது
"ம்" என்று தலையசைத்தாள்.
"யெஸ் ராஜ் ஏதாவது கேட்கணுமா என்கிட்ட?"
"ஆமா"
"யெஸ் கேளுங்க"
"நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது."
"கண்டிப்பா மாட்டேன்."
"நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா?"
ராஜேஸ்வரி கேட்க மனோகருக்கு திக்கென்றது.
சட்டென்று சுதாரித்தான்.
"நோ"
அவன் சொன்ன ஒற்றை வார்த்தை ராஜேஸ்வரிக்கு அதிக மகிழ்வைத் தந்தது.
மனோவும் கிட்டத்தட்ட என்னைப் போல்தான்.
எண்ணியவளின் முகம் மலர அவள் மலர்ந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மனோகர்.
"மனோ"
"ம்"
"ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பொண்ணுன்னு தெரிஞ்சதும் முதன்முதலா என்ன உணர்ந்தீங்க?"
கேட்ட ராஜேஸ்வரியை ஏறிட்ட மனோ சொன்னான்.
"பெருமையா"
"புரியல"
"ரொம்பப் பெருமையா உணர்ந்தேன். சமூகத்தில குற்றங்களைத் தடுக்கிற பொறுப்பில் இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு மனைவியா வர்றது எனக்கு பெருமை."
மனோகர் சொல்ல ராஜேஸ்வரி நெகிழ்ந்தாள். அவனையே பாசமாய் பார்த்தாள்.
"ஒரு விஷயம்"
"சொல்லுங்க ராஜ்"
"என்னோட டூட்டி சில நேரங்கள்ல என்னை வீட்டைக் கான்சென்ட்ரேட் பண்ண விடாது"
"புரியும். நோ ப்ராப்ளம்."
மனோவுடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே ராஜேஸ்வரிக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. மிகவும் அனுசரணையாக இருக்கிறார். உண்மையில் நான் கொடுத்து வைத்தவள்.
ஒரு மனம் அப்படி நினைக்க அடுத்த மனம் வேறு மாதிரி நினைத்தது.
கொஞ்சம்கூட குறைகளை காட்டிக்கொள்ளாமல் ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் எந்த அளவிற்கு நம்பகமானவன். யோசி.
மனோகரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது. என்ன அது?
அவன் இயல்பாக பேசவில்லை என்னை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று ஏற்கனவே மனதிற்குள் நினைத்துப் பேசியிருக்கிறான்.
சரி அப்படியே இருந்தால்தான் என்ன தவறு? யாரை நாம் இம்ப்ரஸ் செய்ய விரும்புவோம்? நமக்குப் பிடித்தவரை மட்டும் தானே? அப்படி என்றால் மனோவிற்கு என்னைப் பிடித்திருக்கிறது.
ராஜேஸ்வரியின் முகம் மலர்ந்தது.
இதயம் மூளை இரண்டிற்கும் இடைப்பட்ட பரிமாற்றத்தில் இதயம் மூளையை முந்த ஆரம்பித்திருந்தது.
ராஜேஸ்வரியின் பார்வையில் அவளின் சம்மதத்தை உணர்ந்த மனோ தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
இருவரும் மீண்டும் ஹாலுக்கு வந்தனர்.
கண்மணி மனோவை கேள்வியாகப் பார்க்க மனோ தன் சம்மதத்தை புன்னகையில் தெரிவித்தான். கண்மணி மகிழ்ந்தாள்.
***
வேளச்சேரி.
ராஜலட்சுமி தியேட்டரில் விஜய் சேதுபதி போஸ்டரில் சிரித்துக் கொண்டிருக்க மனோ சிகரெட்டைப் புகைத்தான்.
அருகில் இருந்த வாசு கேட்டான்.
"மனோ"
"ம்"
"என்ன டென்ஷன்?"
"உனக்குத்தான் எல்லாம் தெரியுமே?"
"ம்"
"அப்புறம் கேட்கறே?"
"இப்படி ஒரு நிலைமை வரும்னு நீ எதிர்பார்த்திருக்கணும் மனோ"
"என்ன சொல்றே வாசு?"
"மூணு பேரை லவ் பண்ணிட்டு இன்னொருத்தியக் கல்யாணம் பண்ணப்போறே. எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த யோகம்?" வாசு கேலியாகப் புன்னகைக்க மனோ தளர்ந்தான்.
"எனக்கு ஒரு ஐடியா சொல்லு வாசு"
"என்ன ஐடியா?"
"லவ் பண்ற பொண்ணை எப்படி கழட்டி விடறது?"
"யாரைக் கழட்டிவிடப் போற?"
வாசு கேட்க மனோ புன்னகைத்தான்.
"மூணு பேரையும்"
"அடப்பாவி"
"வேற வழி தெரியல வாசு"
"மூணு பேருமே உன் மேல உயிரா இருக்காங்க"
"ஆமா"
"நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு"
"அதான் சொன்னேனே வேற வழி தெரியல."
"இந்த மாதிரி நீ மூணு பேர்கிட்ட இப்படி இருந்தது நாளைக்கு வரப்போற உன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா உன்னோட பாடு என்னன்னு யோசிச்சுப் பார்த்தியா?"
"அதெலாம் தெரியாமப் பார்த்துக்குவேன்."
"ம்"
"எனக்கு ஐடியா சொல்லு"
"மூணு பேர் கிட்டயும் தனித்தனியா உட்கார்ந்து பேசிடு."
"என்னன்னு?"
"ஏதாவது காரணம் சொல்லு. கல்யாணம் பண்ணிக்க முடியாதபடி சூழ்நிலைன்னு சொல்லு."
"அப்ப அவங்க ஒத்துக்குவாங்களா?"
"வேற வழி? அதான் உனக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைச்சிடுச்சே. இனி என்ன?"
"என்ன வாசு நக்கல் பண்றே?"
"உண்மையச் சொன்னேன்."
"அவங்க ஒத்துக்குவாங்களா?"
"எதுக்கும் அறை வாங்கத் தயாரா இரு."
"என்ன வாசு சொல்ற?"
"பின்ன? நீ பண்ண காரியத்துக்கு அறை கூட இல்லன்னா எப்படி?"
வாசு புன்னகையுடன் கேட்க மனோ வாசுவையே பார்த்தான்.
***
மனோ தன் அறையில் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
'யாரிடம் முதலில் பேச? '
வினிதா சங்கரி அனிதா மூவரின் போட்டோக்களையும் பார்த்தான்.
'வினிதா தன்னலமில்லாதவள். எப்போது அழைத்தாலும் வந்து மகிழ்வித்தவள். தொடும்போது அவள் அடையும் மகிழ்ச்சியை விடவும் தொட்ட பின் நான் அடைந்த நிறைவை என் முகத்தில் பார்த்து அதில் அவள் அடையும் மகிழ்ச்சிதான் அதிகம்.
வேண்டாம் என்று சொன்னால் நம்ப மறுப்பாள். விளையாடுவதாக நினைப்பாள். பின்? கண்ணீர் வடிப்பாள். வாழ்த்திவிட்டுப் போய்விடுவாள்.
இப்படித்தான் நடக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? ஒருவேளை வேறு மாதிரியும் நடந்துகொள்ள முடியும்.
வேறு மாதிரி என்றால் எப்படி?
அவளே அடித்துத் துவைக்கலாம் அல்லது யாரையாவது ஆள் தயார் செய்து அடிக்க வைக்கலாம் அல்லது அதிகப்படியான காதல் என்றால் கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்ய முன்வரலாம். இது எதுவுமே இல்லாமல் காவல்துறையிடம் புகார் அளித்தால் நம் பாடு முடிந்துவிட்டது.
வினிதா என்ன செய்யப்போகிறாள்? ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை.
சங்கரியிடம் முடியாது என்று சொன்னால் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டு விடுவாள். ஏனென்றால் இப்பொழுதே அவள் என்னுடன் வாழத் தொடங்கிவிட்டாள். எங்கே தன் பெயர் எழுதினாலும் சங்கரி என்ற தன் பெயரை சங்கரி மனோ என்று எழுதுவதில் அவளுக்குத் தனி ஆனந்தம். மூவரில் சங்கரியை சமாளிப்பதில்தான் சிக்கல் அதிகம்.
அனிதா ? அவள் ஒரு ஆசிரியை என்பதால் மெச்சூரிட்டி இருக்கும்.'
மனோவை பல்வேறு யோசனைகள் அழுத்தின.
அனிதாவின் ஃபோட்டோவை பார்த்தவனுக்கு அன்று பிறந்தநாள் பார்ட்டிக்குப் பிறகு அவளை தன் அறைக்கு அழைத்து வந்தது நினைவிற்கு வந்தது.
அவள் வேண்டாமென்று மறுக்க மறுக்க அவளை சாய்த்ததும் அவள் மேல் இயங்கியதும் களித்துக் களைத்ததும் களைப்பு போனபின் மீண்டும் களித்ததும் நினைவிற்கு வர தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.
அனிதாவிடம் பேசுவோம் முதலில்.
யோசித்தவன் அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தான்.
அனிதா.
'பரவாயில்லையே யார்கிட்ட பேசணும்னு நினைக்கிறோமோ அவளே போன் பண்றா.'
எடுத்தான்.
"ஹலோ"
"மனோ"
"ம்"
'நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்."
'நாம பேச வேண்டியத அவ சொல்றா. சரி என்னன்னு கேட்போம்.'
"சொல்லு ஹனி"
"போன்ல வேண்டாம். நேர்ல பேசுவோம்."
"ஓகே எங்க வரட்டும்?"
"இன்னிக்கு சாயங்காலம் 6 மணிக்கு. பெசன்ட் நகர் பீச் க்கு வந்துடு."
"ஓகே ஹனி"
தொடரும்
ஒழுக்கசீலன் முழு நாவலும் ஆடியோ ஸ்டோரியாக .
யார் அழைக்கிறார்கள் என்று அலைபேசியை எடுத்துப் பார்த்த மனோ சங்கரி என்று தெரிந்ததும் கட் செய்தான்.
ராஜேஸ்வரியைப் பார்த்து புன்னகைத்தான். அவன் புன்னகை முகத்தை ஏறிட்டவள் அவன் விழிகளைப் பார்த்துக் கேட்டாள்.
"கொஞ்சம் தனியா பேசலாமா?"
"யெஸ்" எழுந்தான்.
வீட்டிற்கு பின்னால் இருந்த சிறிய தோட்டத்திற்கு இருவரும் வந்தனர்.
செடியில் பூத்திருந்த ரோஜாவை ரசித்துப் பார்த்தான்.
"பூ ரொம்பப் பிடிக்குமா?" கேட்ட ராஜேஸ்வரியைப் பார்த்து புன்னகைத்தான்.
"ரொம்ப. "
அவன் ரோஜாவை பார்த்து மகிழ்ந்ததும் ரொம்ப என்று குழந்தைத்தனமாக சொன்னதும் அவளை அவன் பால் ஈர்த்தது.
"உங்களை நான் எப்படி கூப்பிடலாம்?"
"ஜஸ்ட் கால் மி மனோ"
"நைஸ்"
"ம்"
"மனோ"
"யெஸ் ராஜ்" சொன்னவன் "உங்களை ராஜ்னு கூப்பிடவா?" கேட்டான்.
அவளை ராஜி என்று அழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ராஜ் என்று அழைக்கப்படுவது இதுதான் முதல் முறை. அவன் குரலில் ராஜ் என்று அழைக்கப்பட்டது அவளுக்கு ஒரு மெலிதான மயக்கத்தைத் தந்தது
"ம்" என்று தலையசைத்தாள்.
"யெஸ் ராஜ் ஏதாவது கேட்கணுமா என்கிட்ட?"
"ஆமா"
"யெஸ் கேளுங்க"
"நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது."
"கண்டிப்பா மாட்டேன்."
"நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா?"
ராஜேஸ்வரி கேட்க மனோகருக்கு திக்கென்றது.
சட்டென்று சுதாரித்தான்.
"நோ"
அவன் சொன்ன ஒற்றை வார்த்தை ராஜேஸ்வரிக்கு அதிக மகிழ்வைத் தந்தது.
மனோவும் கிட்டத்தட்ட என்னைப் போல்தான்.
எண்ணியவளின் முகம் மலர அவள் மலர்ந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மனோகர்.
"மனோ"
"ம்"
"ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பொண்ணுன்னு தெரிஞ்சதும் முதன்முதலா என்ன உணர்ந்தீங்க?"
கேட்ட ராஜேஸ்வரியை ஏறிட்ட மனோ சொன்னான்.
"பெருமையா"
"புரியல"
"ரொம்பப் பெருமையா உணர்ந்தேன். சமூகத்தில குற்றங்களைத் தடுக்கிற பொறுப்பில் இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு மனைவியா வர்றது எனக்கு பெருமை."
மனோகர் சொல்ல ராஜேஸ்வரி நெகிழ்ந்தாள். அவனையே பாசமாய் பார்த்தாள்.
"ஒரு விஷயம்"
"சொல்லுங்க ராஜ்"
"என்னோட டூட்டி சில நேரங்கள்ல என்னை வீட்டைக் கான்சென்ட்ரேட் பண்ண விடாது"
"புரியும். நோ ப்ராப்ளம்."
மனோவுடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே ராஜேஸ்வரிக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. மிகவும் அனுசரணையாக இருக்கிறார். உண்மையில் நான் கொடுத்து வைத்தவள்.
ஒரு மனம் அப்படி நினைக்க அடுத்த மனம் வேறு மாதிரி நினைத்தது.
கொஞ்சம்கூட குறைகளை காட்டிக்கொள்ளாமல் ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் எந்த அளவிற்கு நம்பகமானவன். யோசி.
மனோகரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது. என்ன அது?
அவன் இயல்பாக பேசவில்லை என்னை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று ஏற்கனவே மனதிற்குள் நினைத்துப் பேசியிருக்கிறான்.
சரி அப்படியே இருந்தால்தான் என்ன தவறு? யாரை நாம் இம்ப்ரஸ் செய்ய விரும்புவோம்? நமக்குப் பிடித்தவரை மட்டும் தானே? அப்படி என்றால் மனோவிற்கு என்னைப் பிடித்திருக்கிறது.
ராஜேஸ்வரியின் முகம் மலர்ந்தது.
இதயம் மூளை இரண்டிற்கும் இடைப்பட்ட பரிமாற்றத்தில் இதயம் மூளையை முந்த ஆரம்பித்திருந்தது.
ராஜேஸ்வரியின் பார்வையில் அவளின் சம்மதத்தை உணர்ந்த மனோ தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
இருவரும் மீண்டும் ஹாலுக்கு வந்தனர்.
கண்மணி மனோவை கேள்வியாகப் பார்க்க மனோ தன் சம்மதத்தை புன்னகையில் தெரிவித்தான். கண்மணி மகிழ்ந்தாள்.
***
வேளச்சேரி.
ராஜலட்சுமி தியேட்டரில் விஜய் சேதுபதி போஸ்டரில் சிரித்துக் கொண்டிருக்க மனோ சிகரெட்டைப் புகைத்தான்.
அருகில் இருந்த வாசு கேட்டான்.
"மனோ"
"ம்"
"என்ன டென்ஷன்?"
"உனக்குத்தான் எல்லாம் தெரியுமே?"
"ம்"
"அப்புறம் கேட்கறே?"
"இப்படி ஒரு நிலைமை வரும்னு நீ எதிர்பார்த்திருக்கணும் மனோ"
"என்ன சொல்றே வாசு?"
"மூணு பேரை லவ் பண்ணிட்டு இன்னொருத்தியக் கல்யாணம் பண்ணப்போறே. எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த யோகம்?" வாசு கேலியாகப் புன்னகைக்க மனோ தளர்ந்தான்.
"எனக்கு ஒரு ஐடியா சொல்லு வாசு"
"என்ன ஐடியா?"
"லவ் பண்ற பொண்ணை எப்படி கழட்டி விடறது?"
"யாரைக் கழட்டிவிடப் போற?"
வாசு கேட்க மனோ புன்னகைத்தான்.
"மூணு பேரையும்"
"அடப்பாவி"
"வேற வழி தெரியல வாசு"
"மூணு பேருமே உன் மேல உயிரா இருக்காங்க"
"ஆமா"
"நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு"
"அதான் சொன்னேனே வேற வழி தெரியல."
"இந்த மாதிரி நீ மூணு பேர்கிட்ட இப்படி இருந்தது நாளைக்கு வரப்போற உன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா உன்னோட பாடு என்னன்னு யோசிச்சுப் பார்த்தியா?"
"அதெலாம் தெரியாமப் பார்த்துக்குவேன்."
"ம்"
"எனக்கு ஐடியா சொல்லு"
"மூணு பேர் கிட்டயும் தனித்தனியா உட்கார்ந்து பேசிடு."
"என்னன்னு?"
"ஏதாவது காரணம் சொல்லு. கல்யாணம் பண்ணிக்க முடியாதபடி சூழ்நிலைன்னு சொல்லு."
"அப்ப அவங்க ஒத்துக்குவாங்களா?"
"வேற வழி? அதான் உனக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைச்சிடுச்சே. இனி என்ன?"
"என்ன வாசு நக்கல் பண்றே?"
"உண்மையச் சொன்னேன்."
"அவங்க ஒத்துக்குவாங்களா?"
"எதுக்கும் அறை வாங்கத் தயாரா இரு."
"என்ன வாசு சொல்ற?"
"பின்ன? நீ பண்ண காரியத்துக்கு அறை கூட இல்லன்னா எப்படி?"
வாசு புன்னகையுடன் கேட்க மனோ வாசுவையே பார்த்தான்.
***
மனோ தன் அறையில் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
'யாரிடம் முதலில் பேச? '
வினிதா சங்கரி அனிதா மூவரின் போட்டோக்களையும் பார்த்தான்.
'வினிதா தன்னலமில்லாதவள். எப்போது அழைத்தாலும் வந்து மகிழ்வித்தவள். தொடும்போது அவள் அடையும் மகிழ்ச்சியை விடவும் தொட்ட பின் நான் அடைந்த நிறைவை என் முகத்தில் பார்த்து அதில் அவள் அடையும் மகிழ்ச்சிதான் அதிகம்.
வேண்டாம் என்று சொன்னால் நம்ப மறுப்பாள். விளையாடுவதாக நினைப்பாள். பின்? கண்ணீர் வடிப்பாள். வாழ்த்திவிட்டுப் போய்விடுவாள்.
இப்படித்தான் நடக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? ஒருவேளை வேறு மாதிரியும் நடந்துகொள்ள முடியும்.
வேறு மாதிரி என்றால் எப்படி?
அவளே அடித்துத் துவைக்கலாம் அல்லது யாரையாவது ஆள் தயார் செய்து அடிக்க வைக்கலாம் அல்லது அதிகப்படியான காதல் என்றால் கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்ய முன்வரலாம். இது எதுவுமே இல்லாமல் காவல்துறையிடம் புகார் அளித்தால் நம் பாடு முடிந்துவிட்டது.
வினிதா என்ன செய்யப்போகிறாள்? ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை.
சங்கரியிடம் முடியாது என்று சொன்னால் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டு விடுவாள். ஏனென்றால் இப்பொழுதே அவள் என்னுடன் வாழத் தொடங்கிவிட்டாள். எங்கே தன் பெயர் எழுதினாலும் சங்கரி என்ற தன் பெயரை சங்கரி மனோ என்று எழுதுவதில் அவளுக்குத் தனி ஆனந்தம். மூவரில் சங்கரியை சமாளிப்பதில்தான் சிக்கல் அதிகம்.
அனிதா ? அவள் ஒரு ஆசிரியை என்பதால் மெச்சூரிட்டி இருக்கும்.'
மனோவை பல்வேறு யோசனைகள் அழுத்தின.
அனிதாவின் ஃபோட்டோவை பார்த்தவனுக்கு அன்று பிறந்தநாள் பார்ட்டிக்குப் பிறகு அவளை தன் அறைக்கு அழைத்து வந்தது நினைவிற்கு வந்தது.
அவள் வேண்டாமென்று மறுக்க மறுக்க அவளை சாய்த்ததும் அவள் மேல் இயங்கியதும் களித்துக் களைத்ததும் களைப்பு போனபின் மீண்டும் களித்ததும் நினைவிற்கு வர தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.
அனிதாவிடம் பேசுவோம் முதலில்.
யோசித்தவன் அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தான்.
அனிதா.
'பரவாயில்லையே யார்கிட்ட பேசணும்னு நினைக்கிறோமோ அவளே போன் பண்றா.'
எடுத்தான்.
"ஹலோ"
"மனோ"
"ம்"
'நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்."
'நாம பேச வேண்டியத அவ சொல்றா. சரி என்னன்னு கேட்போம்.'
"சொல்லு ஹனி"
"போன்ல வேண்டாம். நேர்ல பேசுவோம்."
"ஓகே எங்க வரட்டும்?"
"இன்னிக்கு சாயங்காலம் 6 மணிக்கு. பெசன்ட் நகர் பீச் க்கு வந்துடு."
"ஓகே ஹனி"
தொடரும்
ஒழுக்கசீலன் முழு நாவலும் ஆடியோ ஸ்டோரியாக .
Last edited:
Author: gavudham
Article Title: ஒழுக்கசீலன் 6
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஒழுக்கசீலன் 6
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.