சைக்யாட்ரிஸ்ட் 10

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
98
1
18
சைக்யாட்ரிஸ்ட் 10

கமிஷனர் அலுவலகம் மதுரை.

தன் சேரில் அமர்ந்திருந்த விஷால் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.

"சார் " இன்ஸ்பெக்டர் விக்டர் நின்றிருந்தார்.

விஷால் தலையாட்ட உள்ளே வந்தார்.

"ஆக்டர் மதன் எப்ப வர்றார்?"

"நைட் பத்து மணிக்கு வர்றார் சார். இங்கே அவருக்கு இருக்கிற ஃபார்ம் ஹவுஸில் அவர் ஸ்டே பண்றார். நாளைக்கு காலைல மாநாட்டுக்கு டைரக்டா வர்றார்."

"மாநாடு எத்தனை மணிக்கு தொடங்குது?"

"காலைல பத்து மணிக்கு சார்"

"செக்யூரிட்டி அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாமே பண்ணிட்டோம் இல்லையா?"

"கண்டிப்பா சார் நானே எல்லாமே இன்ஸ்பெக்ட் பண்ணேன்"

"விக்டர் மாநாடு நடைபெற இடத்தில அறிமுகம் இல்லாதவங்க யாரையும் அனுமதிக்கக் கூடாது ஐடி கார்டு இல்லாம யாரும் உள்ள வரக்கூடாது."

விஷால் சொல்ல விக்டர் தயக்கமாய் கேட்டார்.

"சார் எதாவது இஷ்யூ இருக்கா?"

"ஆமா" சொன்ன விஷால் தொடர்ந்தான் "டேப்லட் மாதிரி யாராவது ஏதாவது வெச்சிருந்தா உடனே பறிமுதல் பண்ணி என்னோட கவனத்துக்கு கொண்டு வாங்க"

"யெஸ் சார்"

***

டாக்டர் சந்திரசேகர் தேவ் இருவரும் தங்கள் ஹோட்டல் அறையில் இருந்தபடி எதிரில் இருந்த மதனின் பண்ணை வீட்டைக் கண்காணித்தனர்.

"டாக்டர்"

"சார்"

"உங்க டேப்லெட் நாலு மணி நேரம்தான் வேலை செய்யுமா அதுக்கு மேல எஃபெக்ட் இருக்காதா?"

"நாலு மணி நேரம் கண்டிப்பா மூளையை மழுங்கடிச்சுடும். ஆனா அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவங்க யோசிச்சாங்கன்னா ஒன்னும் பண்ண முடியாது அப்ப அவங்க இன்னொரு டேப்லட் கண்டிப்பாக போட்டாகணும்."

"புரியுது. மதனுக்கு நீங்க தான் உள்ள போய் டேப்லெட் கொடுக்கப் போறீங்க" தேவ் சொல்ல சந்திரசேகர் அதிர்ந்தார்.

"சார் என்ன சொல்றீங்க? நானா? நான் எப்படி?"

"வேற வழி இல்ல டாக்டர் இப்ப நம்ம கூட யாரும் இல்லை நானும் நீங்களும் மட்டும்தான் அதுக்காக நம்ம டார்கெட்டை நாம செய்யாம இருக்க முடியாது. எனக்கு போய் கொடுக்கிறதப் பத்தி ஒன்னும் பிரச்னை இல்ல. ஆனா நான் விஷாலப் பார்த்துக்கறேன். நீங்கதான் மதன்க்கு டேப்லட் கொடுக்கணும். அவனுக்கு மட்டும் இல்ல அவனோட ஃபேன்ஸ்க்கும் கொடுக்கறீங்க "

"சார்"

"என்ன சொல்லுங்க?"

"என்னால சத்தியமா முடியாது சார்"

"ஏன்?"

"நிறைய பேர் அப்பாவிங்க அவங்களுக்கு இதைக் கொடுத்து கொல்றத நினைக்கிறப்ப மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு சார்" சொன்ன சந்திரசேகரை வியப்பாய் பார்த்தான் தேவ்.

"பரவாயில்லையே திருந்திட்டீங்க போல " தேவ் சிரிக்க சந்திரசேகர் புன்னகைத்தபடி ஏதோ சொல்ல முயன்றார். முடியாமல் நெஞ்சைப் பிடித்தபடி கீழே சரிந்தார். தேவ் கையில் இருந்த பிஸ்டலில் இருந்து வெளிப்பட்ட தோட்டா அவர் மார்பை துளைத்திருந்தது

'என்ன டாக்டர் நீங்க பாட்டுக்கு டக்குனு திருந்திட்டா நான் பாவம் இல்லையா?'

'நானே எல்லாமே பண்ணிக்கிறேன் டாக்டர் ஃபர்ஸ்ட் விஷால் அதுக்கப்புறம் மதன் அப்புறம் அவனோட ஃபேன்ஸ். இந்த தேவ் ஆயிரம் பேருக்கு சமம் . குட் பை டாக்டர் '

***

காலை எட்டு மணி.
தமுக்கம் மைதானம். ரசிகர்கள் நிறைந்தனர்.

விஷால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டான். அவன் அருகில் சென்ற தேவ் "ஹலோ சார்" என்றான்.

"சொல்லுங்க என்ன வேணும்?"

"நான் உங்களோட ஃபேன் சார்"

"நான் என்ன சினிமா நடிகரா? எனக்கு ஃபேன் இருக்க? "

"என்ன சார் இப்படி சொல்றீங்க? அவங்க ரீல் ஹீரோக்கள், சட்டம் ஒழுங்கக் காப்பாத்தற நீங்கல்லாம் ரியல் ஹீரோக்கள் சார் "

"நீங்க சொல்றதக் கேக்கறதுக்கு நல்லா இருக்கு. எனிவே தேங்க்ஸ் ஃபார் தி காம்ப்ளிமென்ட்."

"சார் எனக்கு இன்னிக்கு பர்த்டே உங்க கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?"

"வாங்க" விஷால் அழைக்க அருகில் வந்த தேவ் தன் மொபைல் எடுத்து செல்ஃபி எடுத்தான்.

"சார்"

"ம்"

"ஸ்வீட் எடுத்துக்கங்க" தேவ் அப்பாவியாய் முகத்தை வைத்தபடி சாக்லெட்டை நீட்ட விஷால் எடுத்துக்கொண்டான்.

தேவ் தன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை விஷால் அறியாமல் சாமர்த்தியமாக மறைத்தபடி "தேங்க்ஸ் சார்" என்று தள்ளிச்சென்றான்.

விஷால் சாக்லெட்டைப் பிரிக்க அவன் மொபைல் அடித்தது. முத்துகிருஷ்ணன் லைனில் இருக்க விஷால் எடுத்தான்.

"சொல்லுங்க முத்துகிருஷ்ணன்"

"சார் V ட்ரக்ஸ் ஓனர் வித்யாசாகரா இருக்க முடியாது. வேற யாரோதான்னு சொன்னீங்களே"

"ஆமா"

"அந்த ஓனர் பேர் தேவ் சார். அன்னிக்கு உங்கள போன்ல மிரட்டினதும் இவன்தான்."

"அவன் போட்டோ எதுவும் இருக்கா?"

"ஆமா சார். உங்க வாட்சப்புக்கு அனுப்பியிருக்கேன் சார்"

"தேங்க்ஸ் முத்துக்கிருஷ்ணன்."
சொன்னவன் தன் வாட்சப்பில் முத்துக்கிருஷ்ணன் அனுப்பிய மெசேஜை கிளிக் செய்ய லோடிங் என்றது.

***

தேவ் மதனின் அறைக்கு வெளியிலிருந்த தயாரிப்பாளர் சக்ரவர்த்தியைப் பார்த்து புன்னகைத்தான்.

"குட் மார்னிங் சார்"

"குட் மார்னிங் நீங்க?"

"நான் க்ரைம் பிராஞ்ச்ல இருக்கேன். மதன் சாரோட செக்யூரிட்டி அரேஞ்ச்மெண்ட்ஸ் நான் தான் பார்த்துக்கறேன் " தேவ் சொல்ல சக்கரவர்த்தி அவனைப் பார்த்த பார்வையில் மரியாதை கூடி இருந்தது.

"மதன் சார்க்கு எதுவும் இன்கன்வீனியன்ஸ் இருக்கா? "

"இல்ல ஒன்னும் இல்ல"

"அது அவரே சொன்னா கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்" தேவ் சாமர்த்தியமாக சொல்ல சக்கரவர்த்தி ஏமாந்தார்.

"ஓகே வாங்களேன்"

சக்கரவர்த்தி மதன் அறைக்குள் செல்ல தேவ் அவரைத் தொடர்ந்தான்.

***

விஷால் மொபைலில் இருந்த போட்டோ லோட் ஆகி முடித்திருக்க அதைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

"விக்டர் " விஷால் கத்த இன்ஸ்பெக்டர் விக்டர் விஷாலை நோக்கி வேகமாக ஓடினார்.

"சார்"

போட்டோவை அவரிடம் காண்பித்த விஷால்

"இவனை எங்கே பார்த்தாலும் அரெஸ்ட் பண்ணுங்க" என்றான்.

சாக்லேட்டை மீண்டும் கவரில் சுற்றியவன் மனதில் ஃப்ளாஷ் அடித்தது. இந்த சாக்லேட் நிச்சயமாக பிரெயின் ஸ்டிமுலேடிங் டேப்லெட் உள்ளடக்கியதுதான்.

அவனை உடனடியாகப் பிடிக்க வேண்டும். அவன் எப்படி அதற்கு முன் அவன் வேறு யாருக்காவது சாக்லேட்டை கொடுத்து விட்டால்? ரசிகர்கள் கூட்டமாக கூடிய விஷால் மலைத்தான்.

வெளிப்படையாக அறிவிப்ப எதுவும் கொடுக்க முடியாது. அது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். இப்போதிருக்கும் ஒரே வழி அவனை உடனடியாக பிடிப்பதுதான்.

விஷால் சிசிடிவி விஷுவல்ஸ் இருந்த அறைக்கு ஓடினான். அவன் பார்வை பரபரவென்று அனைத்து இடங்களிலும் பதிந்து மீண்டன. மதன் அறையில் அவனும் மதனும் இன்னொருவரும் நின்றிருந்ததைப் பார்த்ததும் விஷால் மதன் அறை நோக்கிப் பாய்ந்தான்.

வேகமாக மதன் அறைக்குள் நுழைந்தான்.

சக்கரவர்த்தி விஷாலை ஏறிட்டார்.

"சார்"

"இங்க இப்ப உங்க கூட ஒருத்தன் இருந்தானே அவன் எங்கே?" விஷால் கேட்க சக்கரவர்த்தி பதில் சொன்னார்.

"கிரைப் பிரான்ச் ஆஃபீசரா?"

"ஸாரி அவன் ஒரு கிரிமினல் உங்ககிட்ட கிரைம் பிராஞ்ச்ன பொய் சொல்லியிருக்கான். அவன் இப்ப எங்க?"

"இப்பதான் பர்த்டேக்கு சாக்லேட் கொடுத்துட்டு கிளம்பறான்."

"மை காட் அந்த சாக்லேட் சாப்பிடக் கூடாது "

"அது பிரச்னை இல்லை. மதன் எப்ப யார் கொடுத்தாலும் அவங்க கிட்ட பாசமா வாங்கிட்டு அதை உடனே குப்பையில் போடுவாரு சாப்பிட மாட்டார் " சக்கரவர்த்தி சொல்ல விஷால் நிம்மதியாக உணர்ந்தான்.

ரசிகர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்ற தேவ் சாக்லெட்டை எடுக்க கையை உள்ளே விட அவன் கை பின்னால் வளைத்துப் பிடித்து முறுக்கப்பட்டது. தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டான். தனியாக இருந்த ஒரு அறையில் அவனை இழுத்து வந்த விஷால் பளார் என்று கன்னத்தில் அறைய சிரித்தான்.

"என்ன டென்சன் ஆயிட்டியா?" தேவ் கேட்க விஷால் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தான்.

"ஏன்டா இப்படி பண்ணே?"

"வெறி எனக்கு வெறி அதிகம்"

"என்ன சொல்ற?"

"சின்ன வயசுல இருந்தே இந்த சமூகம் என்னை கேவலப்படுத்துச்சு.முடிஞ்ச அளவுக்கு தாக்குபிடிச்சேன் ஆனா என்னால முடியல. என்னை யாரும் அவமானப்படுத்தாம இருக்கணும்னு எனக்கு தேவை பணம். பணம் இருந்தா போதும் யாரும் நம்மள அவமானப் படுத்த மாட்டாங்க நம்ம கிட்ட பொய்யாவாவது நடிச்சுப் பேசுவாங்க பொய்யாவாவது மரியாதை கொடுப்பாங்க அந்த மரியாதை எனக்குப் புடிச்சது. பணம் சம்பாதிக்க நான் எல்லா வழியும் பயன்படுத்தினேன். இதோ இந்த பிரெயின் ஸ்டிமுலேட்டிங் டேப்லெட் கூட எனக்கு எக்கச்சக்கமா பணத்தை தரத்தான் போகுது. எல்லாமே கரெக்டாத்தான் போயிட்டு இருந்துச்சு நீ வர்ற வரைக்கும். நீ வந்ததுக்கப்புறம் தான் எல்லாமே கொலாப்ஸ் ஆயிடுச்சு. "

"உன்னால எத்தனையோ பேர் செத்திருக்காங்க. அந்த குற்ற உணர்ச்சி உனக்கு இல்லையா என்ன?"

"சமூகத்தால பாதிக்கப்பட்ட யாருக்குமே சமூகம் பாதிக்கப்பட்டா எந்த குற்ற உணர்ச்சியும் இருக்காது"

"எல்லாரும் உன்ன மாதிரி இருக்க மாட்டாங்க தேவ்"

"உண்மைதான் நான் தனி. இந்த தேவ் தனி. நான் இப்படித்தான் இருப்பேன். என்னால என்னை மாத்திக்க முடியாது."

"உன் அரஸ்ட் பண்ணி ஜெயில்ல வச்சா கண்டிப்பா நீ மாறித்தான் ஆகணும் "

"என்ன காமெடி பண்றியா? இந்த கேஸ் நீ கோர்ட்டுக்கு கொண்டு போனா ஃபர்ஸ்ட் இதை நம்புமா? ஒவ்வொருத்தருடைய தற்கொலைக்கு நான் தான் காரணம்னு நீ சொன்னா கோர்ட் உனக்கு ஏதாவது பிரச்னையான்னு உன்னை சந்தேகமா பார்க்கும். சேலஞ்ச் பண்ணிக்கலாமா?" தேவ் சிரித்தபடி கேட்க விஷால் மலைத்துப் போய் பார்த்தான்.

"உன்னை நான் ஒன்னு கேட்கவா?" தேவ்.கேட்க என்னவென்று பார்த்தான் விஷால்.

"உன்னோட பொசிஷன் பவர் இந்த சப்போர்ட்ல தான் நீ என்னை பிடிச்சிருக்கே. தனி மனுஷனா உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாது. நீ ஒரு பெரிய சைபர்" தேவ் சொல்ல விஷால் சிரித்தான்.

"என்ன நான் உன்னை அட்டாக் பண்ணனுமா? அடிச்சு இப்படி எல்லாம் சொல்லச் சொன்னேன்னு கோர்ட்ல சொல்லவா? உன்னோட பிரில்லியன்ஸ் எனக்குத் தெரியும். உன் திட்டம் என்கிட்ட நடக்காது." விஷால் சொல்ல தேவ் புன்னகைத்தான். விஷால் எதிர்பாராத நேரத்தில் விஷாலை எட்டி உதைக்க விஷால் தரையில் விழப் போய் சுதாரித்தான்.

"என்ன ஏசி சார் என்னை நீங்க திரும்ப அடிக்க வேண்டாமா? அடிங்க சார்" தேவ் சொல்ல விஷால் அமைதியாகப் புன்னகைத்தான். சொன்னான்.

"ஒரே ஒரு அடி போதும் நீ செத்துப் போய்டுவே. நான் ரொம்ப கண்ட்ரோல்ட்" சொன்ன விஷாலின் மொபைல் அடித்தது.

***

"சிட்டில யங்ஸ்டர்ஸ் தற்கொலைகள் ரொம்ப அதிகமா இருக்கு"

"எனக்கென்னமோ கொஞ்சம் அன்யூசுவலா இருக்குற மாதிரி இருக்கு சார் " சொன்ன எஸ் பி தீனதயாளை நேர் பார்வை பார்த்தபடி கேட்டார் கமிஷனர்.

"தற்கொலைங்களா இருக்காதுன்னு சொல்றீங்களா?"

"உறுதியாக சொல்ல முடியல ஒரு டவுட்"

"வேணும்னா கிளியர் பண்ணிக்க வேண்டியது தானே?"

"சார்"

"ஒருத்தன் இருக்கான். அவன் கிட்ட சொல்வோம். நிச்சயமா வேலைய முடிச்சுடுவான்"

"யார் சார்?"

"விஷால்"

சொன்ன கமிஷனர் தன் மொபைலை எடுத்து விஷாலுக்கு அழைத்தார்.

**"

கமிஷனர் காலிங் என்று வர விஷால் பேசினான்.

"யெஸ் சார்"

"விஷால் இப்ப நீங்க சமீபமாக கவனித்து இருப்பீங்க தமிழ்நாடு ஃபுல்லா சூயிசைட்ஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அது இயற்கையானதா இல்லை செயற்கையானதா? என்ன காரணம்னு கொஞ்சம் என்கொயரி பண்ணி ரிப்போர்ட் தர முடியுமா?"

கமிஷனர் கேட்க விஷால் "எனக்கு ஒரு டவுட் சார்" என்றான்.

"சொல்லுங்க"

"ஒருவேளை இது செயற்கையானதுன்னு தெரிஞ்சு அதுக்கு பின்னாடி ஒரு கிரிமினல் இருக்கான்னு தெரிஞ்சா என்ன சார் பண்ணனும்?" விஷால் கேட்க கமிஷனர் "வாட் டூ யூ மீன்?" என்று கேட்டார்

"சார்"

"சொல்லுங்க விஷால்"

"இந்த கேஸ் கோர்ட்டில நிக்குமா? "

"கஷ்டம்தான்"

"அப்ப என்ன சார் பண்ணனும்?"

"நமக்கு மக்கள் தான் முக்கியம் சட்டத்தை முடிஞ்ச அளவுக்கு காப்பாத்த முயற்சி பண்ணனும். முடியாத பட்சத்தில் மக்கள் நலம் தான் முக்கியம் அதுக்கு தகுந்தபடி நாம தான் முடிவு எடுக்கணும் " கமிஷனர் சொல்ல "தேங்க்ஸ் சார் . இந்த கேஸ் முடிஞ்சிடுச்சு சார்" என்றான்.

மறுமுனையில் கமிஷனர் ஆச்சரியமடைந்தார்.

"என்ன சொல்றீங்க விஷால் நிஜமாவா எப்படி?"

"நான் உங்களுக்கு டீட்டெயிலா ரிப்போர்ட் அனுப்பறேன் சார் " சொல்ல விஷால் மொபைலை பாக்கெட்டில் வைத்தபடி தேவ் அருகில் வந்தான்.

"என்ன …" ஏதோ சொல்ல முயன்ற தேவ்க்கு விஷால் வாய்ப்பளிக்கவில்லை. எட்டி உதைக்க சுவரில் மோதி விழுந்து அலறினான். அவன் கொண்டு வந்த சாக்லெட்கள் கீழே சிதறிக்கிடந்ததைப் பார்த்த விஷால் இரண்டு சாக்லெட்களை எடுத்தான். கவர்களைப் பிரித்தான். தேவ் அருகில் வர அவன் பயத்துடன் அலறினான்.

"வேண்டாம் என்னை விட்டுடு ப்ளீஸ்"

அவன் கழுத்தில் மிதித்தபடி விஷால் சாக்லெட்களை அவன் வாய்க்குள் போட்டு விழுங்கச் செய்தான். ஐந்தாவது நிமிடத்தில் தேவ் பயங்கரமாய் அலறினான்.

"அய்யோ என்னால முடியல காப்பாத்து "

"தேவ் இதுல இருந்து விடுபடணுமா? உனக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு தற்கொலை பண்ணி செத்துப் போய்டு"

விஷால் சொல்ல தேவின் கண்கள் செருகின.

வேகமாய் மொட்டை மாடிக்கு ஓடிய தேவ் அங்கே இருந்து கீழே குதித்தான். குதித்த வேகத்தில் தலை உடைந்து ரத்தம் தெறித்தது.

***

குன்னூர்,

ஆர்த்தியின் வயிற்றில் காதை வைத்துக் கேட்ட விஷாலிடம் ஆர்த்தி கேட்டாள்.

"பாப்பா என்ன சொல்லுது விஷால்?"

"லவ் யூ பான்னு" விஷால் முகத்தில் பூரிப்பாய் சொல்ல அவனை நெகிழ்வாய் பார்த்தாள் ஆர்த்தி.

நிறைந்தது.

வாசித்தோருக்கும் நேசித்தோருக்கும் நன்றிகள்.

கவுதம் கருணாநிதி

Enjoy Psychiatrist as audio story in GK Tamil Novels You Tube Channel.

 
Last edited:

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 10
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: admin