பேபி 4
அவன் ஒரு மாதிரியாக இருந்தான். அனைவர் மீதும் அவனுக்கு கோபமாக வந்தது. இந்த சமூகம் அவனைப் போட்டு அழுத்தியதில் அவனுக்குள் பழி வாங்கும் உணர்வு மிதமிஞ்சியிருந்தது. கோபமும் வஞ்சமும் அழிவும் தான் என் வாழ்க்கையாகி விடுமோ ? என்ற பயத்தில் அவன் காட்டில் தனியாக நடந்து அங்கும் இங்கும் அலைந்து திரிகையில் அந்த இடத்தை அடைந்தான். அந்த இடம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. வாயிலின் இரண்டு புறமும் விலங்குகளின் எலும்புகள் சிதறி இருந்தன. மற்ற சந்தர்ப்பமாக இருந்திருந்தால் அவன் பயந்திருப்பான். ஆனால் பயத்தை எல்லாம் தாண்டி வெகு நாட்கள் ஆகிவிட்டது. உள்ளே என்னதான் இருக்கிறது என்று ஆர்வம் மட்டும் தான் அவனுக்குள் மேலிட்டது.
உள்ளே செல்ல முனைந்தான். அப்போது ஒரு பாம்பு அவனை நோக்கி பாய்ந்தது. அதை சட்டென்று கவனித்து விட்டவன் கையால் பிடித்து தூக்கி எறிந்தான். உள்ளே சென்றான்.
அங்கே அவன் கண்ட காட்சிக்கு மற்ற யாராவது இருந்திருந்தால் அதிர்ந்திருப்பர்.
ஒரு சடலம் தோல் உரிந்த நிலையில் தலைகீழாகத் தொங்கியது. அதை ரசித்துப் பார்த்தவன் சட்டென்று தன் அருகில் நிழலாட திரும்பிப்பார்த்தான்.
அங்கே அந்த சாமியார் நின்றிருந்தார். சாமியார் என்று சொல்ல முடியாது மிகவும் கொடூரமாக இருந்தார். அவர் விழிகள் அவன் மேல் பதிந்தன. கழுத்தில் போட்டிருந்த எலும்பு மாலையைத் தடவியபடி அவனை ஏறிட்டார்.
“யார் நீ?” கேட்டார்.
“எனக்குத் தெரியல”
அவன் சொன்ன பதில் அவரைத் திகைக்க வைத்தது.
“அப்படின்னா?”
“அப்படின்னா அப்படித்தான்”
அவன் பேசியது அவருக்கு கோபத்தை வரவழைத்தது ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் கேட்டார்.
“இது எந்த இடம்னு தெரியுமா? இங்க வர்றவங்க திரும்பி போக மாட்டாங்கன்னு தெரியுமா?” சொன்னவர் அதைக் கேட்டு அவன் பயப்படுவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவன் முகத்தில் பயத்தின் ரேகைகள் சுத்தமாக இல்லாதது அவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது.
“யார் நீ?” மீண்டும் கேட்டார்.
“வாழ்க்கையில எல்லா விஷயத்துலயும் தோத்துப் போன ஒருத்தன்னு வச்சுக்கங்க”
“அப்படின்னா?”
“எனக்கு எல்லாரையும் ஜெயிக்கணும்”
“அதுக்கு என்ன பண்ணப் போறே?”
“தெரியல”
“அதுக்கு நான் ஒரு வழி சொன்னா செய்வியா?”
கேட்டவரை உற்றுப் பார்த்தான்.
“என்ன பண்ணனும்?”
அவனைப் பார்த்தவர் சிரித்தார். தன் தாடியை நீவியபடி அவனிடம் கேட்டார்.
“செத்துப் போகணும் முடியுமா?”
அவன் பதறுவான் என்று எதிர்பார்த்தவர் அவன் இயல்பாக இருப்பதை ஆச்சரியமாய் பார்த்தார்.
“எனக்கு ஒரு சந்தேகம்”
“கேளு”
“நான் செத்துப் போனா நான் எப்படி மத்தவங்கள ஜெயிப்பேன்?”
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”
“சொல்லுங்க”
“ஒரு கல்யாணமான பொண்ணோட கர்ப்பப்பைக்குள்ள கருவா நீ போனா உனக்கு எல்லாரையும் ஜெயிக்கிற சக்தி கிடைக்கும்.”
அவர் சொன்னதை அவன் நம்ப முடியாமல் பார்த்தான்.
“நீங்க சொல்றது…?”
“நிச்சயமா நடக்கும்”
“அப்படி ஒரு பொண்ணுக்கு நான் எங்க போவேன்? அது மட்டும் இல்ல. நான் தான் அந்த பொண்ணோட உடம்புக்குள்ள கருவா போறேன்னு எனக்கு எப்படி தெரியும்?”
“அது என்னோட வேலை”
“புரியல”
“கர்ப்பமா இருக்கிற பொண்ண மயானத்துக்கு கொண்டு வந்து அவளோட கருவைக் கொன்னுட்டு காலியாகிற அந்த கர்ப்பப்பையில உன்னோட உயிர செலுத்திடுவேன். உயிர் மாற்ற மந்திரத்தை இடைவிடாம ஜெபிச்சு இது பண்ணா நீ கருவா அங்க போயிடுவே . நீ வளர வளர சாத்தானாத்தான் வளர்வே. உன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இதே மத்த ஆவிங்கன்னா எதுக்காச்சும் ஒண்ணுக்கு கட்டுப்படும்.
நீ கருவிலிருந்தே சாத்தானாத்தான் வளரப்போறே உன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது இன்னும் சொல்லப்போனா நீ ஒரு அசுரன் உன்ன ஜெயிக்க இந்த உலகத்தில் யாருமே கிடையாது. நீ ஆசைப்பட்டபடி உனக்கு கிடைக்கப் போற வாழ்க்கை இது, வேணுமா வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்க. “
அவர் சொல்ல அவன் அவரை தீர்க்கமாய் பார்த்தான்.
“இதனால உங்களுக்கு என்ன லாபம் ?”
“நேரம் வர்றப்ப நானே சொல்றேன்”
“நான் எப்படி இந்த விஷயத்துக்கு தகுதியா இருக்க முடியும்னு நினைக்கிறீங்க?”
“நீ வாழ்க்கையில தோல்விகள் மட்டும் சந்திச்சவன். உன்னோட கண்ணுல விரக்தி மட்டும் தான் தெரியுது. பாம்பு உன்ன கொத்த வர்றப்ப நீ சட்டுன்னு அதை தூக்கிப் பிடிச்சு எறிஞ்சிட்டே . உன்னால எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்னு தோணுச்சு. தோல் இல்லாம ஒரு பிணம் தலைகீழா தொங்கிட்டிருக்கிறத யார் பார்த்தாலும் பயந்துட்டு ஓடுவாங்க. ஆனா உனக்கு பயம் இல்ல.”
அவர் சொல்ல அவன் கேட்டான்.
“நான் எப்ப சாகணும்?”
“எந்த கர்ப்பப்பைக்குள்ள நீ போறியோ அந்த கர்ப்பப்பை உன் முன்னாடி இருக்கிறப்ப நீ உன்னோட கழுத்த அறுத்துட்டு ரத்தத்தை அவ மேல தெளிச்சுட்டு சாகணும்.”
“சரி. அது எப்ப நடக்கும் எங்க நடக்கும்?”
“இந்த காட்டுல இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளிப் போனா ஒரு மயானம் இருக்கு. இன்னிக்கு அந்த மயானத்துக்கு நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்”
“சரி” சொன்னவன் அவரைப் பார்த்து கேட்டான்.
“நான் யாருக்குள்ள போகணுமோ அவளும் அங்க வருவாளா?”
“அவளை மயானத்துக்குக் கொண்டு வர்றதுக்கு நான் ஏற்கனவே ஒரு ஏவல அனுப்பிட்டேன் “
தொடரும்
அவன் ஒரு மாதிரியாக இருந்தான். அனைவர் மீதும் அவனுக்கு கோபமாக வந்தது. இந்த சமூகம் அவனைப் போட்டு அழுத்தியதில் அவனுக்குள் பழி வாங்கும் உணர்வு மிதமிஞ்சியிருந்தது. கோபமும் வஞ்சமும் அழிவும் தான் என் வாழ்க்கையாகி விடுமோ ? என்ற பயத்தில் அவன் காட்டில் தனியாக நடந்து அங்கும் இங்கும் அலைந்து திரிகையில் அந்த இடத்தை அடைந்தான். அந்த இடம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. வாயிலின் இரண்டு புறமும் விலங்குகளின் எலும்புகள் சிதறி இருந்தன. மற்ற சந்தர்ப்பமாக இருந்திருந்தால் அவன் பயந்திருப்பான். ஆனால் பயத்தை எல்லாம் தாண்டி வெகு நாட்கள் ஆகிவிட்டது. உள்ளே என்னதான் இருக்கிறது என்று ஆர்வம் மட்டும் தான் அவனுக்குள் மேலிட்டது.
உள்ளே செல்ல முனைந்தான். அப்போது ஒரு பாம்பு அவனை நோக்கி பாய்ந்தது. அதை சட்டென்று கவனித்து விட்டவன் கையால் பிடித்து தூக்கி எறிந்தான். உள்ளே சென்றான்.
அங்கே அவன் கண்ட காட்சிக்கு மற்ற யாராவது இருந்திருந்தால் அதிர்ந்திருப்பர்.
ஒரு சடலம் தோல் உரிந்த நிலையில் தலைகீழாகத் தொங்கியது. அதை ரசித்துப் பார்த்தவன் சட்டென்று தன் அருகில் நிழலாட திரும்பிப்பார்த்தான்.
அங்கே அந்த சாமியார் நின்றிருந்தார். சாமியார் என்று சொல்ல முடியாது மிகவும் கொடூரமாக இருந்தார். அவர் விழிகள் அவன் மேல் பதிந்தன. கழுத்தில் போட்டிருந்த எலும்பு மாலையைத் தடவியபடி அவனை ஏறிட்டார்.
“யார் நீ?” கேட்டார்.
“எனக்குத் தெரியல”
அவன் சொன்ன பதில் அவரைத் திகைக்க வைத்தது.
“அப்படின்னா?”
“அப்படின்னா அப்படித்தான்”
அவன் பேசியது அவருக்கு கோபத்தை வரவழைத்தது ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் கேட்டார்.
“இது எந்த இடம்னு தெரியுமா? இங்க வர்றவங்க திரும்பி போக மாட்டாங்கன்னு தெரியுமா?” சொன்னவர் அதைக் கேட்டு அவன் பயப்படுவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவன் முகத்தில் பயத்தின் ரேகைகள் சுத்தமாக இல்லாதது அவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது.
“யார் நீ?” மீண்டும் கேட்டார்.
“வாழ்க்கையில எல்லா விஷயத்துலயும் தோத்துப் போன ஒருத்தன்னு வச்சுக்கங்க”
“அப்படின்னா?”
“எனக்கு எல்லாரையும் ஜெயிக்கணும்”
“அதுக்கு என்ன பண்ணப் போறே?”
“தெரியல”
“அதுக்கு நான் ஒரு வழி சொன்னா செய்வியா?”
கேட்டவரை உற்றுப் பார்த்தான்.
“என்ன பண்ணனும்?”
அவனைப் பார்த்தவர் சிரித்தார். தன் தாடியை நீவியபடி அவனிடம் கேட்டார்.
“செத்துப் போகணும் முடியுமா?”
அவன் பதறுவான் என்று எதிர்பார்த்தவர் அவன் இயல்பாக இருப்பதை ஆச்சரியமாய் பார்த்தார்.
“எனக்கு ஒரு சந்தேகம்”
“கேளு”
“நான் செத்துப் போனா நான் எப்படி மத்தவங்கள ஜெயிப்பேன்?”
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”
“சொல்லுங்க”
“ஒரு கல்யாணமான பொண்ணோட கர்ப்பப்பைக்குள்ள கருவா நீ போனா உனக்கு எல்லாரையும் ஜெயிக்கிற சக்தி கிடைக்கும்.”
அவர் சொன்னதை அவன் நம்ப முடியாமல் பார்த்தான்.
“நீங்க சொல்றது…?”
“நிச்சயமா நடக்கும்”
“அப்படி ஒரு பொண்ணுக்கு நான் எங்க போவேன்? அது மட்டும் இல்ல. நான் தான் அந்த பொண்ணோட உடம்புக்குள்ள கருவா போறேன்னு எனக்கு எப்படி தெரியும்?”
“அது என்னோட வேலை”
“புரியல”
“கர்ப்பமா இருக்கிற பொண்ண மயானத்துக்கு கொண்டு வந்து அவளோட கருவைக் கொன்னுட்டு காலியாகிற அந்த கர்ப்பப்பையில உன்னோட உயிர செலுத்திடுவேன். உயிர் மாற்ற மந்திரத்தை இடைவிடாம ஜெபிச்சு இது பண்ணா நீ கருவா அங்க போயிடுவே . நீ வளர வளர சாத்தானாத்தான் வளர்வே. உன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இதே மத்த ஆவிங்கன்னா எதுக்காச்சும் ஒண்ணுக்கு கட்டுப்படும்.
நீ கருவிலிருந்தே சாத்தானாத்தான் வளரப்போறே உன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது இன்னும் சொல்லப்போனா நீ ஒரு அசுரன் உன்ன ஜெயிக்க இந்த உலகத்தில் யாருமே கிடையாது. நீ ஆசைப்பட்டபடி உனக்கு கிடைக்கப் போற வாழ்க்கை இது, வேணுமா வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்க. “
அவர் சொல்ல அவன் அவரை தீர்க்கமாய் பார்த்தான்.
“இதனால உங்களுக்கு என்ன லாபம் ?”
“நேரம் வர்றப்ப நானே சொல்றேன்”
“நான் எப்படி இந்த விஷயத்துக்கு தகுதியா இருக்க முடியும்னு நினைக்கிறீங்க?”
“நீ வாழ்க்கையில தோல்விகள் மட்டும் சந்திச்சவன். உன்னோட கண்ணுல விரக்தி மட்டும் தான் தெரியுது. பாம்பு உன்ன கொத்த வர்றப்ப நீ சட்டுன்னு அதை தூக்கிப் பிடிச்சு எறிஞ்சிட்டே . உன்னால எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்னு தோணுச்சு. தோல் இல்லாம ஒரு பிணம் தலைகீழா தொங்கிட்டிருக்கிறத யார் பார்த்தாலும் பயந்துட்டு ஓடுவாங்க. ஆனா உனக்கு பயம் இல்ல.”
அவர் சொல்ல அவன் கேட்டான்.
“நான் எப்ப சாகணும்?”
“எந்த கர்ப்பப்பைக்குள்ள நீ போறியோ அந்த கர்ப்பப்பை உன் முன்னாடி இருக்கிறப்ப நீ உன்னோட கழுத்த அறுத்துட்டு ரத்தத்தை அவ மேல தெளிச்சுட்டு சாகணும்.”
“சரி. அது எப்ப நடக்கும் எங்க நடக்கும்?”
“இந்த காட்டுல இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளிப் போனா ஒரு மயானம் இருக்கு. இன்னிக்கு அந்த மயானத்துக்கு நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்”
“சரி” சொன்னவன் அவரைப் பார்த்து கேட்டான்.
“நான் யாருக்குள்ள போகணுமோ அவளும் அங்க வருவாளா?”
“அவளை மயானத்துக்குக் கொண்டு வர்றதுக்கு நான் ஏற்கனவே ஒரு ஏவல அனுப்பிட்டேன் “
தொடரும்
Author: gavudham
Article Title: பேபி 4
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: பேபி 4
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.